மியன்மாரில் முதல் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்கள்

இதுவரை கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை என்று கூறி வந்த மியன்மாரைப் பலரும் நம்பாமல் சந்தேகக் கண்களுடன் பார்த்த நிலையில் நேற்று (மார்ச் 23) அங்கு முதல் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின.

கிட்டத்தட்ட 54 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியன்மார், கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவம் ஏதும் அங்கு பதிவாகவில்லை என்று கடந்த பல வாரங்களாக கூறி வந்தது.

ஆனால், திங்கட்கிழமை நிலவரப்படி மியன்மாரில் 214 பேர் மட்டுமே கிருமித்தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 36 வயது மியன்மார் ஆடவருக்கும் பிரிட்டனிலிருந்து திரும்பிய 26 வயது மியன்மார் ஆடவருக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து லாவோஸ் அதன் முதல் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்களை இன்று உறுதிசெய்தது. இருவரும் வெளிநாட்டுக்குச் சென்றதுடன் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

#மியன்மார் #கொவிட்-19 #லாவோஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!