போரிஸ் ஜான்சன்: வீட்டிலேயே இருங்கள்

போரிஸ் ஜான்சன்: வீட்டிலேயே இருங்கள்

2 mins read
6f160290-d3d5-44e8-b88a-74e2a18116a0
கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் பிரிட்­ட­னில் அறி­விக்­கப்­பட்ட முடக்­கத்தை மீறு­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார். படம்: ஏஎப்பி -

லண்­டன்: கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் பிரிட்­ட­னில் அறி­விக்­கப்­பட்ட முடக்­கத்தை மீறு­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார். வீட்­டி­லேயே இருக்­கும்­படி அவர் பிரிட்­டிஷ் மக்­களை கேட்­டுக்­கொண்­டார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பிரிட்­ட­னில் மர­ணம் அடைந்­தோ­ரின் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 335க்கு உயர்ந்­தது.

பிரிட்­டிஷ் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குப் போது­மான பாது­காப்­புச் சாத­னங்­கள் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அவர்­க­ளுக்கு முகக்­க­வ­சங்­கள் போன்ற பாது­காப்­புச் சாத­னங்­களை அந்­நாட்டு ராணு­வம் அனுப்பி வைக்க உத­வும் என்று நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

"பிரிட்­டிஷ் மக்­க­ளுக்கு நான் மிக எளி­மை­யான உத்­த­ர­வை­யி­டு­கி­றேன். நீங்­கள் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும்," என்று தொலைக்­காட்சி மூலம் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் கூறி­னார்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்க, உடற்­ப­யிற்சி செய்ய, மருத்­துவ உதவி பெற, பரா­ம­ரிப்­புச் சேவை வழங்க, அவ­சி­யம் ஏற்­பட்­டால் மட்­டும் வேலைக்­குச் சென்று வர மட்­டும் பொது­மக்­கள் வெளியே செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றார் அவர்.

தங்­கள் வீட்­டில் வசிக்­காத குடும்ப உறுப்­பி­னர்­கள், நண்­பர்­கள் ஆகி­யோ­ரைச் சந்­திக்­கக்­கூ­டாது என்று திரு ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார்.

"விதி­மு­றை­களை நீங்­கள் மீறி­னால் உங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க போலி­சா­ருக்கு அதி­கா­ரம் உண்டு. அப­ரா­தம் விதிப்­பது, கூடி­யி­ருப்­போ­ரைக் கலைப்­பது போன்­றவை அதில் அடங்­கும்," என்று திரு ஜான்­சன் தெரி­வித்­தார்.

அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களை விற்­பனை செய்­யும் கடை­கள் மூடப்­படும் என்று பிரிட்­டிஷ் அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. துணிக்­க­டை­கள், நூல­கங்­கள், விளை­யாட்டு மைதா­னங்­கள், வெளிப்­புற உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், வழி­பாட்­டுத் தளங்­கள் முத­லி­யவை மூடப்­படும்.

வீட்­டி­லேயே இருக்­கும்­படி பிரிட்­டிஷ் அர­சாங்­கம் அண்­மை­யில் வலி­யு­றுத்­தி­யும் கடந்த வார­யி­று­தி­யில் மில்­லி­யன்­க­ணக்­கா­னோர் பூங்­காக்­கள் போன்ற இடங்­க­ளுக்­குச் சென்­ற­னர்.

ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இடையே குறைந்­தது 2 மீட்­டர் தூர இடை­வெளி இருக்க வேண்­டும் என்று விடுக்­கப்­பட்ட உத்­த­ரவை பிரிட்­டிஷ் மக்­கள் அலட்­சி­யப்­ப­டுத்­தி­னர். இதன் கார­ண­மாக பிரிட்­டிஷ் அர­சாங்­கம் தற்­போது கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.

இந்த கிரு­மித்­தொற்று பிரிட்­டன் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சந்­திக்­கும் மிக மோச­மான மிரட்­டல் என்று திரு ஜான்­சன் கூறி­னார். கிரு­மித்­தொற்று தொடர்ந்து வேக­மா­கப் பர­வி­னால் ஏற்­கெ­னவே திண­றிக்­கொண்­டி­ருக்­கும் தேசிய சுகா­தா­ரச் சேவை­யால் சமா­ளிக்க முடி­யா­மல் போகும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.