சவூதி அரேபியாவில் விடியும் வரை ஊரடங்கு

சவூதி அரேபியாவில் விடியும் வரை ஊரடங்கு

1 mins read
cbc1ac3e-401f-45c8-85b1-fe998165afe2
சவூதி அரே­பி­யா­வில் 21 நாட்­க­ளுக்கு பொழுது சாய்ந்து விடி­யும் வரை ஊர­டங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஏஎப்பி -

ரியாத்: சவூதி அரே­பி­யா­வில் பொழுது சாய்ந்து விடி­யும் வரை ஊர­டங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது. கொரோனா கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்ள இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஊர­டங்கு உத்­த­ரவை சவூதி மன்­னர் சல்­மான் பிறப்­பித்­த­தும் சவூதி நேரப்­படி மாலை 7 மணி­யி­லி­ருந்து வீட்­டை­விட்டு வெளியே வர வேண்­டாம் என்று போலிஸ் கார்­களில் சென்­ற­வாறு அதி­கா­ரி­கள் ஒலி­பெ­ருக்­கி­கள் மூலம் அறி­விப்பு செய்து மக்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்­தி­னர். இந்த ஊர­டங்கு 21 நாட்­க­ளுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று சவூதி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சவூதி அரே­பி­யா­வில் 562 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. மத்­திய கிழக்கு நாடு­களில் இதுவே ஆக அதி­கம். கிரு­மித்­தொற்று கார­ண­மாக சவூ­தி­யில் இது­வரை மர­ணங்­கள் ஏற்­ப­ட­வில்லை. ஊர­டங்கு கார­ண­மாக சவூ­தி­யில் பொழுது சாய்ந்ததும் சாலை­கள் வெறிச்­சோடி இருக்­கின்­றன.