கொரோனா கிருமித்தொற்று காரணமாக எச்சரிக்கை நிலையை ஆரஞ்சிலிருந்து சிவப்புக்கு அரசாங்கம் மாற்றப்போவதாக பொய்த் தகவல்கள் வலம் வருவதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"எச்சரிக்கை நிலையை அரசாங்கம் சிவப்புக்கு மாற்றப்போவதாக புரளிகள் வலம் வருவது எங்களுக்குத் தெரியும்.
சிங்கப்பூரில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படும் என்ற பொய்ச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவையெல்லாம் பொய்ச் செய்திகள்.
இத்தகைய பொய்ச் செய்திகள் பொறுப்பில்லாதவை, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடியவை," என்று அமைச்சர் ஈஸ்வரன் சாடினார். பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

