நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தியவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தியவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

1 mins read

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் நுழைந்து தாக்­கு­தல் நடத்­திய ஆஸ்­தி­ரே­லி­யர் தம் மீது சுமத்­தப்­பட்ட கொலை குற்­றச்­சாட்டுகளை ஒப்­புக் கொண்­டார்.

இந்­தத் தாக்­கு­த­லில் பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த 51 பேர் மாண்­ட­னர்.

பிரென்­டன் டாரண்ட் மீது மொத்­தம் 51 கொலை குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தப்பட்டுள்ளன.

கிறைஸ்ட்­சர்ச்­சில் உள்ள உயர் நீதி­மன்­றத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட காணொளி விசாரணையில் அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­தாக டிவி­என்­இ­சட் தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

மேலும் கொலை செய்ய முயற்சி செய்த 40 குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் பயங்­க­ர­வா­தம் தொடர்­பான குற்றச்­ சாட்­டை­யும் அவர் ஒப்­புக் கொண்­ட­தாக அது கூறி­யது.

2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் ேததியிலிருந்து டாரண்ட் போலிஸ் காவலில் இருந்து வருகிறார்.

அன்றைய தினம் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளி வாசல்களில் பலர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது தானியக்க துப்பாக்கி யுடன் நுழைந்தவன், கண்ணில் பட்டவர்களை நோக்கி சுட்டான்.

இதில் 51 பேர் மாண்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்தக் காட்சியை ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரடியாக அவன் ஒளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியரான 29 வயது டாரண்ட் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் முன்பு திட்டமிட்டபடி ஆறு வார வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதிபதி கேமரன் மன்டர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு பின்னர் வழங்கப்படவிருக்கிறது.