இந்தோனீசியா: வட்டார அளவில் முடக்கும் திட்டம்

இந்தோனீசியா: வட்டார அளவில் முடக்கும் திட்டம்

2 mins read
675b233c-88bb-4bdf-9e2d-78218175c662
முடக்­க­நி­லையை அறி­விப்­ப­தற்­குப் பதி­லாக வட்­டார ரீதியில் தனிமைப்படுத்தும் நிலையை அமல்படுத்த இந்தோனீசியா பரிசீலித்து வருகிறது. படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வ­லைத் தடுக்க நாடு முழு­வ­தை­யும் முடங்­கச் செய்­யா­மல் வட்­டார அள­வில் தனி­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை இந்­தோ­னீ­சியா பரி­சீ­லித்து வரு­கிறது.

உல­கின் ஆகப் பெரிய தீவு­க­ளின் கூட்­ட­மா­னது இந்­தோ­னீ­சியா. இங்கு 17,000க்கும் மேற்­பட்ட தீவு­கள், 34 மாகா­ணங்­கள், 500க்கும் மேற்­பட்ட நக­ரங்­கள் உள்­ளன. 270 மில்­லி­யன் மக்­கள் வாழ்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் முடக்­க­நி­லையை அறி­விப்­ப­தற்­குப் பதி­லாக வட்­டார நிலை­யில் தனி­மைப்­ப­டுத்­தும் சாத்­தி­யத்­தைக் கருதி வரு­வ­தாக அர­சி­யல், சட்ட மற்­றும் பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் பேரா­சி­ரி­யர் மாஃபுட் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு நேற்று அனுப்­பிய காணொ­ளி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அத்­து­டன் முடக்­க­நிலை வேறு, இது வேறு என்­றும் அவர் விளக்­க­ம­ளித்­தி­ருந்­தார்.

இந்த வட்­டார நிலை­யில் தனி­மைப்­ப­டுத்­தும் அணு­கு­மு­றை­படி, அந்­தந்த பகுதி மற்­றும் நக­ரங்­க­ளின் சமூ­கத்­தி­னர் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுப்­பது என்று முடி­வெ­டுக்­க­லாம். தங்­க­ளின் பகு­தி­யில் ஏற்­படும் கிரு­மித்­தொற்­றைப் பற்றி அங்கு இருப்­ப­வர்­க­ளுக்­குத்­தான் நன்கு தெரி­யும். அதற்கு ஏற்­பக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாம் என்­றார் நகர்ப்­பு­றத்­திட்ட நிபு­ணர் யாயாட் சுப்­ரி­யாட்னா.

இது­வும் ஒரு வகை­யில் முடக்­க­நி­லை­தான் என்­றா­லும் 'முடக்­க­நிலை' என்று குறிப்­பிட்டு மக்­க­ளி­டையே பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ப­தால் அர­சாங்­கம் இவ்­வாறு கூறு­வ­தாக கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

நேற்று மாலை நில­வ­ரப்­படி மொத்­தம் 1,155 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கிரு­மித்­தொற்று பாதிப்­பால் 102 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத்­தில் ஆக அதிக மரண எண்­ணிக்கை இது.

இந்­நி­லை­யில் பாது­காப்­பான சுகா­தார உப­க­ர­ணங்­க­ளின்றி கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க முடி­யாது என்று இந்­தோ­னீ­சிய மருத்­துவ ஊழி­யர்­கள் நேற்று மிரட்­டல் அளித்­த­னர்.