இலங்கை: கொலைகார அதிகாரி விடுவிப்பு; உலகக் கண்டனம்

இலங்கை: கொலைகார அதிகாரி விடுவிப்பு; உலகக் கண்டனம்

2 mins read
6e05b51a-2836-43b1-923f-c3e927f0c5cc
மரண தண்டனை விதிக்­கப்­பட்ட கொலை­கார ராணுவ அதி­காரி சுனில் ரத்­தி­ன­யாக்கே. படம்: ஊட­கம் -

கொழும்பு: இலங்­கை­யில் 2000ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் ஐந்து வயது குழந்தை உட்­பட பல தமி­ழர்­க­ளைக் கொலை செய்­த­தற்­காக சுனில் ரத்­தி­ன­யாக்கே என்ற ராணுவ அதி­கா­ரிக்கு ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆனால் அவரை அதி­ப­ரின் சிறப்புக் கரு­ணை­யின்பேரில் விடு­விப்­பது என்று அந்­நாட்டு அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே முடி­வெடுத்து இருக்­கி­றார்.

அந்த முடிவை ஐநா அமைப்­பின் மனி­த­ உ­ரி­மை­கள் அமைப்பு கடு­மை­யா­கக் குறை­கூறி கண்­ட­னம் தெரி­வித்து இருக்­கிறது.

அதி­பர், அந்தக் கொலை­கார அதி­கா­ரி­யைக் கரு­ணை­காட்டி விடு­வித்து இருப்­பது அப்­பா­வி­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீதி என்று ஐநா அமைப்­பின் மனித உரி­மை­கள் ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ரூபர்ட் கோல்­வில் ஜெனிவா நக­ரில் தெரி­வித்­தார்.

போர்க் குற்­றங்­கள், மானிட இனத்­திற்கு எதி­ரான குற்­றச்­செயல்­கள், மனித உரிமை மீறல்கள் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக தான் கொண்­டுள்ள அனைத்­து­லகக் கடப்­பா­டு­களை நிறை­வேற்­றப்­போ­வ­தாக இலங்கை அறி­வித்து இருக்­கிறது.

ஆனால் அந்த உறு­தி­யில் இருந்து இலங்கை தவ­றி­விட்­டது என்று ஐநா தெரி­வித்­துள்­ளது.

ராணு­வத்­தில் ஸ்டாஃப் சார்­ஜண்ட்­டாக இருந்த சுனில், 2000 டிசம்­பர் 19ஆம் தேதி யாழ்ப்­பா­ணத்­தில் எட்டு தமி­ழர்­களைக் கொலை செய்­து­விட்­டார் என்று கொழும்பு உயர் நீதி­மன்­றம் 2015ல் தீர்ப்­ப­ளித்து அந்த அதி­கா­ரிக்கு மரண தண்­டனை விதித்­தது.

அந்த அதி­காரி கொலை செய்த எட்டு பேரில் வில்­வ­ராஜா பிர­சாத் என்ற ஐந்து வயது சிறு­வ­னும் ஒரு­வன். அந்­தப் படு­கொ­லை­கள் ''மிர்­சு­வில் படு­கொலை'' என்று வர்­ணிக்­கப்­ப­டு­கிறது.

படு­மோ­ச­மான மனித உரி­மை­மீறல்கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்ற ஒரு நிய­தியை அதி­பர் ராஜ­பக்சே நிர்­வா­கம் அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தா­க ஆணை­யம் கூறி உள்ளது.

அனைத்­து­லக நடு­வர்­கள் ஆணை­ய­மும் இலங்கை அதி­ப­ரின் முடிவைக் கண்­டித்து உள்­ளது.

இவ்­வே­ளை­யில், அந்­தக் கொலை­கார அதி­காரி விடு­விக்­கப்­பட்டு உள்­ளதை இலங்கை புத்­தத் துற­வி­யான மெடிலி பன்­ன­லோகா மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்று இருக்­கி­றார்.