மலேசியாவில் மேலும் 150 பேருக்குப் பாதிப்பு; மரண எண்ணிக்கை 34ஆக அதிகரிப்பு

1 mins read
8214fddd-4012-49d2-ae41-3d7c46fbeb39
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மருத்துவ மனையில் கொரோனா கிருமித் தொற்றுக் கான மருத்துவப் பரி சோதனையை நடத்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

பெட்­டா­லிங் ஜெயா: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மலே­சி­யா­வில் மேலும் ஏழு பேர் மாண்­டுள்­ள­னர்.

மேலும் 150 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று நண்­ப­கல் 12 மணி நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மொத்­தம் 34 உயி­ரி­ழப்­பு­கள் நிகழ்ந்­துள்­ளன.

மொத்­தம் 2,470 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

68 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­தா­க­வும் மலே­சிய சுகா­தா­ரத்­துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தெரி­வித்­தார்.

73 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக அவர் கூறி­னார்.

அவர்­களில் 52 பேருக்கு செயற்கை சுவாச இயந்­தி­ரத்­தின் உதவி தேவைப்­ப­டு­வ­தாக டாக்­டர் நூர் ஹிஷாம் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கும் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி வெளியே சென்ற குற்­றத்­துக்­காக பினாங்­கின் மத்­திய செப­ராங் பிராய் மாவட்­டத்­தில் 69 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் அனை­வ­ரும் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், ஜோகூர் மாநி­லத்­தில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வுக்­குக் கட்­டுப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறைந்­தி­ருப்­ப­தாக அம்­மா­நி­லத்­தின் சுகா­தார, சுற்­றுப்­பு­றக் குழு­வின் தலை­வர் திரு ஆர்.வித்­யா­னந்­தன் கவலை தெரி­வித்­துள்­ளார்.