கைக்குழந்தையை கொரோனா பறித்த கொடுமை

1 mins read
1e6f697f-ba9c-4fec-a8a5-56a5239d248a
உலகிலேயே ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கொண்ட அமெரிக்காவில் கிரு­மித்­தொற்­றுக்கு கைக்­கு­ழந்தை ஒன்று உயி­ரி­ழந்­து­விட்டது. இதனை இல்­லி­னோய் மாநில அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு கைக்­கு­ழந்தை ஒன்று உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக இல்­லி­னோய் மாநில அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர். உலகை அச்­சு­றுத்தி வரும் கொள்ளை நோய்க்­குப் பலி­யான முதல் குழந்தை அது என நம்பப்படு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் பதி­வான கொரோனா கிரு­மித்­தொற்று மர­ணங்­களில் ஒரு கைக்­கு­ழந்­தை­யும் அடங்­கும் என்று இல்­லி­னாய்ஸ் ஆளு­ந­ர் ஜேபி பிரிட்ஸ்­கெர் சனிக்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

சிக்­காகோ நக­ரில் மாண்ட குழந்தை ஒரு வய­துக்­கும் குறை­வா­னது என்­றும் அக்­கு­ழந்­தைக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது என்­றும் இல்­லி­னாய்ஸ் பொது சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.

கொவிட்-19 கிருமி தொடர்­பாக கைக்­கு­ழந்தை மர­ணம் இது­வரை நிகழ்ந்­தது இல்லை என்று துறை­யின் இயக்­கு­நர் கோஸி எஸைக் அறிக்கை ஒன்­றில் கூறி­னார்.

குழந்தை மாண்ட விதம் குறித்த முழு விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் கூறிய அவர், அந்­தப் பச்­சி­ளம் குழந்­தை­யின் மர­ணம் குறித்து கேள்­விப்­பட்­ட­தும் தாம் அதிர்ச்­சி­யில் மூழ்­கி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

"குழந்­தையை காலம் பறித்­துச் சென்­று­விட்­டது. இது அக்­கு­ழந்­தை­யின் குடும்­பத்­துக்­குத் தாங்க முடி­யாத சோக­ம். நாமும் துக்­கப்­ப­டு­கி­றோம்," என்­றார் அந்த அதி­காரி.