ஸ்பெயினில் ஒரே நாளில் 838 பேர் மரணம்

ஸ்பெயினில் ஒரே நாளில் 838 பேர் மரணம்

1 mins read
2a47f234-dd31-40ad-b210-8d56dd6e4885
கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஸ்பெ­யி­னில் ஒரே நாளில் 838 பேர் மர­ணம் அடைந்­தி­ருப்­ப­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். இந்­நோ­யின் கார­ண­மாக ஸ்பெ­யி­னில் இவ்­வ­ளவு பேர் ஒரே நாளில் இறந்­தி­ருப்­பது இதுவே முதல்­முறை. படம்: ஏஎஃப்பி -

மட்­ரிட்: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஸ்பெ­யி­னில் ஒரே நாளில் 838 பேர் மர­ணம் அடைந்­தி­ருப்­ப­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். இந்­நோ­யின் கார­ண­மாக ஸ்பெ­யி­னில் இவ்­வ­ளவு பேர் ஒரே நாளில் இறந்­தி­ருப்­பது இதுவே முதல்­முறை.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஸ்பெ­யி­னில் இது­வரை 6,528 பேர் மாண்­டுள்­ள­னர் என்று ஸ்பா­னிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அத்­தி­யா­வ­சி­ய சேவைத் துறை­யில் பணி­பு­ரி­ப­வர்­க­ளைத் தவிர்த்து மற்­ற­வர்­கள் அனை­வ­ரும் இரண்டு வாரங்­க­ளுக்கு வீட்­டி­லேயே இருக்க வேண்டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.