கிருமித்தொற்றால் ஸ்பெயினில் மேலும் 812 பேர் மரணம்

கிருமித்தொற்றால் ஸ்பெயினில் மேலும் 812 பேர் மரணம்

1 mins read
4ef841a3-3796-414d-a7c2-fc9c50b4c92c
நேற்­றைய நில­வ­ரப்­படி கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஸ்பெ­யி­னில் மொத்­தம் 7,340 பேர் மாண்­டனர். ஞாயிற்றுக்கிழமை இந்த எண்­ணிக்கை 6,528ஆக இருந்­தது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­போ­ரின் எண்­ணிக்கை 78,797லிருந்து 85,195க்கு அதி­க­ரித்­துள்­ள அந்நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. படம்: ராய்ட்டர்ஸ் -

மட்­ரிட்: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஸ்பெ­யி­னில் நேற்று மேலும் 812 பேர் மாண்­ட­னர். நேற்று முன்­தி­னம் பதி­வான மர­ணங்­க­ளை­விட இது சற்று குறைவு.

நேற்­றைய நில­வ­ரப்­படி கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஸ்பெ­யி­னில் மொத்­தம் 7,340 பேர் மாண்­டுள்­ள­னர். நேற்று முன்­தி­னம் இந்த எண்­ணிக்கை 6,528ஆக இருந்­தது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­போ­ரின் எண்­ணிக்கை 78,797லிருந்து 85,195க்கு அதி­க­ரித்­துள்­ள­தாக ஸ்பா­னிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இத்­தா­லிக்­குப் பிறகு ஸ்பெ­யி­னில்­தான் ஆக அதி­க­மான

மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக ஸ்பெ­யின் பல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. ஸ்பெ­யி­னில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­படும் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் பெட்ரோ சாஞ்­சேஸ் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, ஸ்பா­னிய மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் போது­மான படுக்­கை­கள் இல்­லா­மல் அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை திக்­கு­முக்­கா­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஹோட்­டல்­க­ளை­யும் மாநாட்டு மையங்­க­ளை­யும் தற்­காலிக மருத்­து­வ­ம­னை­க­ளாக ஸ்பா­னிய அதி­கா­ரி­கள் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

சுகா­தா­ரத் துறை­யி­ன­ருக்கு உத­வி­யாக ராணுவ வீரர்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­னர். கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஸ்பெ­யி­னில் பல உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யில், அந்­நாட்­டின் பொரு­ளி­ய­லும் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

நிலை­மை­யைச் சமா­ளிக்க ஐரோப்­பிய நாடு­கள் ஒன்­றி­ணைந்து பொரு­ளி­யலை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வல் மெக்­ரோன், இத்­தா­லி­யப் பிர­த­மர் கியூ­சிப்பி கோண்ட்டே ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து ஸ்பா­னி­யப் பிர­த­மர்­ திரு சாஞ்­சே­சும் அழைப்பு விடுத்­துள்­ளார்.