ஜெர்மனி: பேரங்காடிகளில் மனித இயந்திரங்கள்

1 mins read
a099f41a-156e-4eb3-b044-7d6aaccdfa94
ஜெர்­ம­னி­யின் பேரங்­காடிகளில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­யைக் கேட்டு அவர்­க­ளுக்கு வேண்­டி­யதை எடுத்­துக் கொடுக்க மனித இயந்­தி­ரம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. 'பெப்­பர்' என்று பெய­ரி­டப்­பட்ட அந்த மனித இயந்­தி­ரம், பேரங்­கா­டி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பாதுகாப்பான இடை­வெ­ளி­யைக் கடை­ப்பி­டிக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கிறது. படம்: இபிஏ -

ஜெர்­ம­னி­யின் பேரங்­காடிகளில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­யைக் கேட்டு அவர்­க­ளுக்கு வேண்­டி­யதை எடுத்­துக் கொடுக்க மனித இயந்­தி­ரம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. 'பெப்­பர்' என்று பெய­ரி­டப்­பட்ட அந்த மனித இயந்­தி­ரம், பேரங்­கா­டி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பாதுகாப்பான இடை­வெ­ளி­யைக் கடை­ப்பி­டிக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கிறது.

ஜெர்­ம­னி­யில் இது­வ­ரை­யி­லும் 67,051 பேர் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். புதி­தாக நேற்று 4,615 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 650 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 67,051 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கிரு­மிப் பர­வ­லைக் குறைக்­கும் வகை­யில் பாதுகாப்பான இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கு­மாறு ஜெர்­மா­னிய அரசு தன் மக்­க­ளுக்கு வலி­யு­றுத்தி வரு­கிறது. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் ஜெர்­மனி, செயலி ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. சிங்­கப்­பூர் அண்­மை­யில் அறி­மு­கப்­ப­டுத்­திய 'ட்ரேஸ்­டு­கெ­தர்' போன்ற செய­லியை முன்­மா­தி­ரி­யா­கக் கொண்டு அந்­தச் செயலி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. படம்: இபிஏ