ரோம்: கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி காப்பகங்களுக்கு அனுப்பும் அரசாங்க கொள்கை ‘உயிரியல் குண்டுகளை’ உருவாக்குவது போன்றது என்று இத்தாலிய மருத்துவர்கள் மற்றும் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
தீவிர சிகிச்சையில் உள்ள 4,000க்கும் அதிகமானோர் உட்பட 28,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் இருப்பதால், படுக்கைகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதாலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைய முடியாதவர்கள் காப்பகங்கள் அல்லது விடுதிகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.
இத்தாலி ஏற்கெனவே 12,400 உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், அங்குள்ள 7,000 காப்பகங்களில் வசிக்கும் 300,000த்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் பாதுகாப்பு குறித்தும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது தொடர்பாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இத்தாலியின் முடக்க நிலை வரும் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதன் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.