வாஷிங்டன்: கொரோனா கிருமிப் பரவலை சீனா கையாண்ட விதத்தை அமெரிக்கா அரசியல்வாதிகள் குறைகூறி வந்தனர்.
ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி சீனாவின் பொருட்களை நம்பியிருக்கும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா கிருமி நெருக்கடிக்கு முன்பு சீனா தயாரித்த முகக்கவசங்களில் ஏறக்குறைய பாதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இது, வழக்கமாக தேவைப்படும் அளவாகும். தற்போது அமெரிக்காவின் பேரங்காடிகளிலும் கடை களிலும் முகக்கவசங்கள் தீர்ந்துவிட்டதால் தேவை மேலும் அதி கரித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கிருமி உலக முழுவதும் பரவி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. ஆனால் அதே வூஹான் நகரம்தான் முகக் கவசம் போன்ற பாதுகாப்புப் பொருட்களை தயாரித்து உலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்துவந்தது.
அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் சீனாதான் இத்தகைய பொருட்களை பெருமளவில் தயாரித்து விநியோகித்துள்ளது என்று அனைத்துலக பீட்டர்சன் பொருளியல் கழகத்தின் ஆய்வாளர் சாட் போவ்ன் குறிப்பிட்டார்.
இதனால் சீனாவுக்கு சந்தையைத் திறந்துவிடாமல் அங்கிருந்து பொருட்களை வாங்க விரும்பா விட்டால் உங்களுக்கு நம்பிக்கையே ஏற்படாது என்று அவர் கூறினார்.

