நியூயார்க்: நியூயார்க்கில் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை கொத்து கொத்தாக அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜாவிட்ஸ் மாநாட்டு நிலையத்தைத் தற்காலிக மருத்துவ மனையாக மாற்ற அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையை ராணுவமும் மத்திய அரசும் இணைந்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலேயே நியூயார்க் நகரில்தான் அதிகமானோர் கிருமி யால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கிருமி பரவல் மையமாகவும் அது திகழ்கிறது. அங்கு மட்டும் நேற்று வரை 47,000 பேருக்கு மேல் கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.