எச்சரித்த கேப்டன் நீக்கம்

எச்சரித்த கேப்டன் நீக்கம்

1 mins read

வாஷிங்­டன்: கொரோனா கிரு­மியைத் தடுத்து நிறுத்த கடற்­படை போது­மான நடவடிக்­கை­களை எடுக்­க­வில்லை என்று வெளிப்­ப­டை­யாக குறைகூறிய யுஎஸ்­எஸ் தியோ­டோர் ரூஸ்­வெல்ட் கப்­ப­லின் கேப்­டன் பதவி யிலிருந்து நீக்­கப்பட்­டுள்­ளார். கேப்­டன் பிரெட் குரோ­ஸி­யர் தமது மேல­தி­கா­ரிகளுக்கு எழு­திய கடி­தத்­தில் கொரோனா கிரு­மிக்கு மக்­கள் பலி­யா­வ­தைத் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டார்.

ஆனால் அமெ­ரிக்க கடற்­­படை­யின் செய­லா­ளரான தாமஸ் மோட்லி, கப்­பல் கமாண்­டர் மிக­வும் மோச­மாக நில­வ­ரத்­தைக் கணித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

அது மட்டுமல்லாமால் தமது கடிதத்தை ஊடகங்களுக்கு அவர் விநியோகித்ததால் அவர் பதவியி லிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தாமஸ் மோட்லி தெரி வித்தார். யுஎஸ்­எஸ் தியோ­டேர் ரூஸ்­வெல்ட் கப்­ப­லில் உள்­ள­வர்­களில் குறைந்­தது நூறு பேர் கிருமி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.