வாஷிங்டன்: கொரோனா கிருமியைத் தடுத்து நிறுத்த கடற்படை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று வெளிப்படையாக குறைகூறிய யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட் கப்பலின் கேப்டன் பதவி யிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கேப்டன் பிரெட் குரோஸியர் தமது மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா கிருமிக்கு மக்கள் பலியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் அமெரிக்க கடற்படையின் செயலாளரான தாமஸ் மோட்லி, கப்பல் கமாண்டர் மிகவும் மோசமாக நிலவரத்தைக் கணித்திருப்பதாகக் கூறினார்.
அது மட்டுமல்லாமால் தமது கடிதத்தை ஊடகங்களுக்கு அவர் விநியோகித்ததால் அவர் பதவியி லிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தாமஸ் மோட்லி தெரி வித்தார். யுஎஸ்எஸ் தியோடேர் ரூஸ்வெல்ட் கப்பலில் உள்ளவர்களில் குறைந்தது நூறு பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

