பாரிஸ்: பிரான்சில் கொரோனா கிருமித்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,400ஐ எட்டியது. இதில் தாதிமை இல்ல மரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொள்ளை நோய் அந்நாட்டு மருத்துவமனைகளில் வியாழக்கிழமைவரை 4,503 பேரை பலிவாங்கியுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாள் எண்ணிக்கையைவிட 12 விழுக்காடு அதிகம் என்றும் அந்நட்டின் சுகாதார ஆணையத்தின் தலைவரான ஜெரோம் சாலோமன் கூறினார்.
இந்நிலையில், அந்நாட்டிலுள்ள தாதிமை இல்லங்களில் கொரோனா கிருமித்ெதாற்று காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 884 என்று தெரியவந்துள்ளது.
இது இந்த நோய்க்கான மரண எண்ணிக்கையை 5,387க்கு உயர்த்தியுள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கை பிரான்சில் உள்ள 7,400 தாதிமை இல்லங்களிலும் நேர்ந்த மரணங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் ெகா ள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
“பிரான்சில் தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத அளவில் பொது சகாதார பாதிப்பு ஏற்படும் நிலை இந்த கொள்ளை நோயால் உருவாகியுள்ளது,” என்று திரு சாலோமன் விளக்கினார்.
பிரான்சில் மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பரந்த அளவிலான முடக்கநிலை ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பின்னரும் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இது இந்த கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினையை எதிர்கொள்ள உதவும் என பிரான்ஸ் நம்புகிறது.
இந்நிலையில், கொரோனா கிருமித் ெதாற்று கண்டிருக்கும் நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்து கையிருப்பு குறைந்து வருவதால், அதைத் தயாரிக்க அல்லது மற்ற நாடுகளிலிருந்து கொணர பிரான்ஸ் அவசர அவசரமாக செயல்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
இதே கவலை
ஸ்ெபயின், இத்தாலி போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுவதாக அந்தச் செய்தித் தகவல் மேலும் கூறியது.