லண்டன்: கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திறந்தவெளி மருத்துவமனைகளை பிரிட்டன் அவசர அவசரமாக எழுப்பி வருகிறது.
இதன் தொடர்பில் நாட்டின் மேற்குப் பகுதியில் பிரிஸ்டல் நகரில் ஒரு மருத்துவமனையும் வடக்கே ஹேரோகேட் பகுதியில் ஒரு மருத்து வமனையும் எழுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் 4,000 படுக்கைகள் கொண்ட வசதி யுடன் 10 நாட்களுக்குள் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், முதல்நிலை மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருக்கிறதா என்று பிரிட்டிஷ் அரசு சோதித்துப் பார்க்க தவறியது விமர்சனங்களுக்கு வழிவிட்ட நிலையிலும் பிரிஸ்டலிலும் ஹேரோகேட்டிலும் திறந்தவெளி மருத்துவமனைகள் அமைவது தொடர்பான அறிவிப்பு வெளிவந்துஉள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஏறக்குறைய 3,000 படுக்கை வசதிகள் கொண்ட இதுபோன்ற மேலும் இரண்டு மருத்துவ மனைகள் பர்மிங்ஹம், மான்செஸ்டர் ஆகிய நகரங்களிலும் அமையவுள்ளதாக பிரிட்டனின் தேசிய சுகாதார பராமரிப்புச் சேவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் கடந்த புதன்கிழமையன்று ஆக அதிக எண்ணிக்கையாக ஒரு நாளில் 569 பேர் இந்தக் கொடிய நோய்க்கு பலியாகியுள்ளனர்.
இதற்கு முந்திய நாளில் 563 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு மென்மையாக எடுத்துக் ெகாண்டுள்ளதாக எழுந்த குறைகூறல்களை அடுத்து இனி கொரோனா கிருமித்ெதாற்று இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை பெருமளவில் அதிகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
திரு ஜான்சன் தமக்கு இந்தக் கிருமித்தொற்று கண்டிருப்பதாகக் கூறி அவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியிலிருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.
இதேபோல், இந்தக் கிருமித்தொற்று கண்டுள்ள இளவரசர் சார்ல்ஸ் வியாழக்கிழமையன்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்இருந்து வெளிவந்தார்.
அதன்பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், தமது அனுபவம், “அபூர்வமானது, விரக்தியளிப்பதாக இருந்தது, பல சமயங்களில் வேதனையளித்தது,” என்று கூறினார்.