சுவாசக்கருவிகளை தர மறுக்கிறது: துருக்கி மீது ஸ்பெயின் சாடல்

மட்ரிட்: அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஸ்பெயினுக்கு சென்றடையவிருந்த நூற்றுக் கணக்கான சுவாசக் கருவிகள், மருத்துவ உபகரணங்களைத் தர மறுப்பதாகத் துருக்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் இதற்காக ஏற்கெனவே மில்லியன் கணக்கான தொகையை செலுத்தியிருந்த போதிலும், துருக்கி ‘தங்கள் சொந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற் காக’ சுவாசக் கருவிகளைத் தடுத்து வைத்து இருப்பதாக ஸ்பெயின் கூறியது.

சுவாசக் கருவிகளைக் கொடுப்பதில் துருக்கிய அதிகாரிகளைச் சம்மதிக்கச் செய்வதில் தான் தோற்றுவிட்டதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் சொன்னார். ஸ்பெயின் வட்டார தலைவர்களில் ஒருவரான எமிலியானோ ‘துருக்கி ஒருதலைப்பட்சமாக முடிவு செய்து உள்ளது’ என்றார்.

இதற்கிடையே, ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124,736 ஆகும். பலியானவர்களின் எண்ணிக்கை 11,744 ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!