மூன்று மாதங்களுக்குப் பிறகு சீனாவில் உயிரிழப்பு இல்லை

மூன்று மாதங்களுக்குப் பிறகு சீனாவில் உயிரிழப்பு இல்லை

2 mins read
5e64c4ad-168e-40e2-ba08-79d93e818150
சுமார் இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த வூஹான் நகரம் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. ஆனால் கிருமித் தொற்று அச்சத்தில் இருந்து மீளாத மக்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்தபடி சாலையில் வலம் வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக்குக் கடந்த ஜன­வரி மாதம் முதல் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளைப் பலி கொடுத்த சீனா­வில் நேற்று முதன்­மு­றை­யாக எந்த உயி­ரி­ழப்­பும் ஏற்­ப­ட­வில்லை.

சீனா­வில் கிரு­மித் தொற்று மைய­மாக இருந்த ஹுபெ­யின் வூஹான் நகரத்தில் மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு நேற்று எந்த உயி­ரி­ழப்­பும் ஏற்­ப­ட­வில்லை என்று தேசிய சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் வெளி­நாடு சென்று சீனா திரும்­பி­ய­வர்­க­ளி­டையே பதி­வான கிரு­மித் தொற்று எண்­ணிக்­கை­யும் நேற்று குறைந்­த­தாக சீனா அறி­வித்­துள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வர மேற்­கொள்­ளப்­பட்ட கடும் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­ளின் பல­னாகக் கடந்த சில வாரங்­க­ளாக சீனா­வில் உள்­ளூர் கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் ஒன்­றி­ரண்டு மட்­டுமே பதி­வாகி வந்த நிலை­யில், வெளி­நாடு சென்று திரும்­பி­ய­வர்­க­ளால் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது.

இதைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக, வெளி­நாட்­டி­னர் சீனா­விற்­குள் வரத் தடை விதிக்­கப்­பட்­டது.

மேலும் சீனா­விற்குச் சென்று கொண்­டி­ருந்த அனைத்­து­லக விமா­னங்­க­ளின் எண்­ணிக்கை 3,000ஆக குறைக்­கப்­பட்­டது.

இது­த­விர, வெளி­நாடு சென்­று­விட்டு சீனா­விற்­குத் திரும்­பும் சீன குடி­மக்­கள் அனை­வ­ரும் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் 32 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­கள் அனை­வ­ரும் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பி­ய­வர்­கள். முந்­திய நாளில் இந்த எண்­ணிக்கை 38ஆக இருந்­தது.

வெளி­நாட்­டி­லி­ருந்து சீனா­விற்­குத் திரும்­பிய 983 பேர் இது­வரை கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­த­விர அறி­கு­றி­கள் இல்­லா­த­வர்­கள் மூலம் கிரு­மிப் பர­வு­வ­தும் சீனா­விற்கு இன்­னொரு தலை­வ­லி­யாக உள்­ளது.

நேற்று முன்­தி­னம் அறி­கு­றி­கள் இல்­லாத 30 பேருக்­குக் கிரு­மித் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 9 பேர் வெளி­நாட்­டி­னர். 18 பேர் ஹுபெய் மாகா­ணத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி சீனா­வில் மொத்­தம் 81,740 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மொத்­தம் 3,331 பேர் பலி­யா­கி­னர்.