இரு மலேசிய கட்டடங்களில் கடும் கட்டுப்பாடுகள்

இரு மலேசிய கட்டடங்களில் கடும் கட்டுப்பாடுகள்

1 mins read
815e2ff7-1d7d-4845-b1b7-de32ad542d7d
மலேசியாவில் சிலாங்கூர் மேன்சன் கட்டத்தைச் சுற்றி போலிஸ் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளது. படம்: மலேமெயில் -

புத்­ரா­ஜெயா: கோலா­லம்­பூ­ரில் உள்ள சிலாங்­கூர் மேன்­சன், மலா­யன் மேன்­சன் ஆகிய இரு கட்­ட­டங்­களில் கடு­மை­யான கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நட­மாட்ட உத்­த­ரவு நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த கட்­ட­டங்­களில் கொவிட்-19 கிரு­மித் தொற்­றால் 15 பேர் பாதிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து நட­மாட்ட உத்­த­ரவு மிகவும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சி­யா­வின் தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சபரி யாக்­கோப் அறி­வித்­தார்.

இவ்­வி­டங்­களில் பெரு­ம­ள­வி­லான வெளி­நாட்­டி­னர் உட்­பட சுமார் 6,000 பேர் தங்­கி­யுள்­ள­னர்.

அவர்­கள் அவ்­வி­டத்­தை­விட்டு வெளி­யே­று­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் விற்­கும் கடை­க­ளைத் தவிர மற்ற அனைத்து கடை­களும் மூடப்­பட்­டுள்­ளன.

நேற்று நடப்­புக்கு வந்த இந்த கடு­மை­யாக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் அப்­ப­கு­தி­யில் உள்ள அனை­வ­ருக்­கும் மருத்­துவப் பரி­சோ­தனை முடி­யும் வரை நடப்­பில் இருக்­கும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்­தான், பங்­ளா­தேஷ் மற்­றும் இந்­தியா ஆகிய மூன்று நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இக்­கட்­ட­டங்­களில் அதி­கம் வசிப்ப­தால் மலே­சிய அரசு அந்­தந்த தூத­ர­கங்­க­ளோடு இணைந்து பணி­யாற்­றும் என்று மலே­சியா கூறி­யுள்­ளது.