லாகூர்: பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சுமார் 50 கைதிகளுக்கு கிருமித் தொற்றியுள்ளதாக லாகூர் மாகாண அமைச்சர் ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இத்தாலி சென்று திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் இருந்து மற்றவர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 23ஆம் தேதி அவருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது.

