மட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அன்றாட உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது.
அங்கு நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதை இது காட்டுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மேலும் 5,478 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை. ஸ்பெயினில் இதுவரை மொத்தம் 140,510 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
மரண எண்ணிக்கை 743ஆக அதிகரித்து 13,798ஐ எட்டியது. கடந்த சனிக்கிழமைக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான மரண எண்ணிக்கை.
இருப்பினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஸ்பெயினில் பதிவாகி உள்ள மரண எண்ணிக்கை குறைந்துள்ளது.
பொது வாழ்வில் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் கிருமிப் பரவலை எதிர்கொள்வதில் ஸ்பெயின் சிரமத்தை எதிர்கொள்கிறது.

