மொரோக்கோவில் முகக்கவசம் அணியாவிடில் சிறை

மொரோக்கோவில் முகக்கவசம் அணியாவிடில் சிறை

1 mins read
d43ddc86-c27b-4a83-8823-b6583f3f8ea0
முகக்­க­வ­சம் அணி­யா­மல் பொது இடங்­க­ளுக்­குச் செல்­வோ­ருக்கு மூன்று மாதங்­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் 102 பவுண்டு வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­படும் என்று மொரோக்கோ அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. இந்தப் புதிய விதி­முறை நேற்று தொடங்­கி­யது. படம்: ஏஎப்பி -

கச­பி­லாங்கா: முகக்­க­வ­சம் அணி­யா­மல் பொது இடங்­க­ளுக்­குச் செல்­வோ­ருக்கு மூன்று மாதங்­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் 102 பவுண்டு வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­படும் என்று மொரோக்கோ அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. இந்தப் புதிய விதி­முறை நேற்று தொடங்­கி­யது.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இம்­மா­தம் நடு­வி­லி­ருந்து மொரோக்­கோ­வில் முடக்­க­நிலை நடை­மு­றை­யில் உள்­ளது.

அடுத்த வாரத்­தி­லி­ருந்து ஒரு நாளுக்கு ஏறத்­தாழ ஆறு மில்­லி­யன் முகக்­க­வ­சங்­களை உற்­பத்தி செய்ய மொரோக்கோ திட்­ட­மிட்­டுள்­ளது.

தற்­போது ஒரு­நா­ளுக்கு 3.3 மில்­லி­யன் முகக்­க­வ­சங்­களை அது உற்­பத்தி செய்­கிறது.

மொரோக்­கோ­வில் இது­வரை 1,141 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. 83 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.