நாடு திரும்பும் மலேசியர்கள் குழப்பம்

நாடு திரும்பும் மலேசியர்கள் குழப்பம்

1 mins read
607f5c99-9127-4725-a485-6d8a80bc1173
சிங்­கப்­பூ­ரில் இருந்து நாடு திரும்­பும் மலே­சி­யர்­கள் தங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தும் பத்­தி­ரங்­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்­னும் அர­சாங்க உத்­த­ர­வைக் கடு­மை­யா­கப் பின்­பற்­று­மாறு ஜோகூர் குடி­நு­ழை­வுத் துறை கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ளது. படம்: ஏஎப்பி -

சிங்­கப்­பூ­ரில் இருந்து நாடு திரும்­பும் மலே­சி­யர்­கள் தங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தும் பத்­தி­ரங்­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்­னும் அர­சாங்க உத்­த­ர­வைக் கடு­மை­யா­கப் பின்­பற்­று­மாறு ஜோகூர் குடி­நு­ழை­வுத் துறை கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ளது.

இது தொடர்­பாக குடி­நு­ழை­வுத் துறை தலைமை இயக்­கு­நர் கைருல் ஜைமீ தாவுத், ஜோகூர் மாநில குடி­நு­ழைவுப் பிரிவு இயக்­கு­ந­ருக்­குக் கடி­தம் ஒன்றை அனுப்பி உள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்டு கிரு­மித்­தொற்று இல்லை என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் அதற்­கான ஆவ­ணங்­களை வைத்திருந்தால் மட்­டுமே 14 நாள் கட்­டா­யத் தனி­மைப்­

ப­டுத்­து­த­லில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­வர் என்­று அக்­க­டி­தத்­தில் அவர் கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரிலிருந்து சென்ற ஏரா­ள­மான மலே­சி­யர்­களை தடுத்து நிறுத்­திய அதி­கா­ரி­கள், அவர்­க­ளி­டம் ஆவ­ணங்­கள் இருந்­த­போ­தி­லும் ஜோகூர் பாரு­வில் உள்ள அர­சாங்க தனி­மைப்­ப­டுத்­துதல் மையத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அத­னால் உண்­மை­யான நிலை என்ன என்­பது அறி­யா­மல் பல­ரும் குழப்­பத்­தில் இருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ஜோகூர் அதி­கா­ரி­க­ளால் தடுக்கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான டான் ஜீ யாங், 16, என்­னும் மாண­வர் தம்­மி­டம் கொவிட்-19 கிரு­மித் தொற்று இல்லை என்­ப­தற்­கான ஆவ­ணம் இருந்­த­போ­தி­லும் அர­சாங்க தனி­மைப்­ப­டுத்­துல் யைத்­துக்­குத் தம்­மைக் கொண்டு சென்­றுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கடு­மை­யான சமூக இடை வெளி நடை­மு­றை­கள் அறி­விக்கப் பட்ட பின்­னர் அதி­க­மான மலே­சிய ஊழி­யர்­கள் நாடு திரும்­பிக்­கொண்டு உள்­ள­னர்.