தென்கொரியா: கொரோனா தொற்றிலும் ஜனநாயகக் கடமை

தென்கொரியா: கொரோனா தொற்றிலும் ஜனநாயகக் கடமை

1 mins read
4152899a-97b3-4dfa-b195-ef7a9d83b3b6
தென்கொரியாவின் சோல் நகரில் கையுறை, முகக்கவசம் அணிந்தபடி நேற்று பலரும் வாக்கு அளித்தனர். படம்: ஏஎஃப்பி -

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கொரோனா கிரு­மித்தொற்று கார­ண­மாக பெரும் பாதிப்பு ஏற்­பட்டு வந்­தா­லும் அங்கு மக்­கள் தங்­கள் ஜன­நா­ய­கக் கட­மை யைத் தவ­றா­மல் நேற்று நிறை­வேற்­றத் தொடங்­கி­னர்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வாக்­க­ளிப்பு ஏப்­ரல் 15ல் நடக்­கிறது. ஆனால் அன்று அதி­கக் கூட்­டம் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ளும் வகை­யில் நேற்று கொரோனா நோயா­ளி­கள் வாக்கு அளித்­த­னர். அவர்­களுக்கு என்றே தனிப்­பட்ட வாக்குச்­சா­வ­டி­கள் அமைக்­கப்­பட்டு இருந்­தன. முன் வாக்­குப்­பதிவு இன்­றும் நடக்­கிறது. இந்த இரண்டு நாட்­க­ளி­லும் 3,500 வாக்­குச் சாவ­டி­கள் செயல்­படும்.

தலை­ந­கர் சோல், டேவூ நக­ரம் உள்­ளிட்ட கொவிட்-19 பாதிப்பு அதி­கம் இருக்­கும் பகு­தி­களில் அமைக்­கப்­பட்­டுள்ள சிகிச்சை நிலை­யங்­களில் சிகிக்சை பெற்று வரும் 3,000 பேருக்­கும் அதிக நோயா­ளி­களும் 900 மருத்­துவ ஊழி­யர்­க­ளும் வாக்கு அளிப்­ப­தற்­காக அதி­கா­ரி­கள் எட்டு வாக்­குச் சாவ­டி­களை அமைத்துள்ளனர். அதி­பர் மூன் ஜே, அதி­பர் மாளிகை அருகே இருந்த வாக்­குச் சாவ­டி­யில் வாக்­க­ளித்­தார். தென்­கொ­ரி­யா­வில் மொத்­தம் 10,450 பேர் கொரோனா தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 208 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 7,117 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 3,125 பேர் சிகிச்சை பெற்­று­வ­ரு­கி­றார்­கள். 46,500 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ள­னர்.