கம்போடியாவில் அவசரநிலைக்கு வழிவிடும் சட்டம் நிறைவேற்றம்

கம்போடியாவில் அவசரநிலைக்கு வழிவிடும் சட்டம் நிறைவேற்றம்

1 mins read
09c19f3e-dcee-4d28-915d-63625cdb5913
கம்­போ­டிய நாடா­ளு­மன்­றம் நேற்று ஒரு சட்­டத்தை நிறை­வேற்­றி­யது.   கொரோனா கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்­கும் வகை­யில் நாட்­டில் அவ­சரநிலை­யைப் பிர­க­ட­னப்­படுத்துவதற்­கான வழியை அந்­தச் சட்­டம் ஏற்­ப­டுத்­தித் தரு­கிறது.  படம்: இபிஏ -

நோம்­பென்: கம்­போ­டிய நாடா­ளு­மன்­றம் நேற்று ஒரு சட்­டத்தை நிறை­வேற்­றி­யது.

கொரோனா கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்­கும் வகை­யில் நாட்­டில் அவ­சரநிலை­யைப் பிர­க­ட­னப்­படுத்துவதற்­கான வழியை அந்­தச் சட்­டம் ஏற்­ப­டுத்­தித் தரு­கிறது.

இப்­படி ஒரு நிலை­யைத் தான் அமல்­ப­டுத்­தக்­கூ­டும் என்று பிர­த­மர் ஹுன் சென் தெரி­வித்­துள்­ளார்.

அவசரநிலை நடப்­புக்கு வந்­தால், தக­வல்­தொ­டர்­பு­கள் கண்­கா­ணிக்­கப்­படும். ஊட­கம், சமூக ஊட­கம் கட்­­டுப்­ப­டுத்­தப்­படும். பொது­மக்­க­ளி­டம் அச்­சத்தை, கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய, அல்­லது தேசிய பாது­காப்­புக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தக­வல் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் அல்­லது தடை செய்­யப்­படும்.

நாட்­டில் அவ­ச­ர­நிலை பிர­க­ட­னப்­படுத்தப்­பட்­டால் பிர­த­மர் அதிக அதி­கா­ரங்­க­ளைப் பெறு­வார் என்று மனித உரிமை அமைப்­பு­கள் எச்­ச­ரிக்­கைக் குரல் எழுப்பி உள்­ளன.

கம்­போ­டி­யா­வில் எதிர்த்­த­ரப்பு அர­சி­யல்­வாதிகளை­யும் மனித உரிமை அமைப்­பு­க­ளை­யும் ஊட­கத்­தை­யும் ஹுன் சென் ஒடுக்­கி­வரு­கி­றார் என்று பல கால­மா­கவே மேற்­கத்­திய நாடு­கள் குறை­கூறி வரு­கின்­றன. கம்­போ­டி­யா­வில் நேற்­று­டன் 119 பேரை கொரோனா கிருமி தொற்றி உள்ளது.