வாஷிங்டன்: கொரோனா கிருமிப் பரவல் உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை விளைவிக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நாடுகளை அதன் பொதுச்செயலாளர்
அன்டோனியோ குட்டேரஸ் கூறியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க ஐநா முதன்முறையாகக் கூடியது.
காணொளி வாயிலாக நடைபெற்ற இச்சந்திப்பில், "தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் உலக நாடுகள் கவனம் செலுத்தும் நேரத்தில், சமூக அமைதியின்மை மற்றும் வன்முறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது
"உலகம் ஏற்கெனவே மோசமான சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், அனைத்துலக அமைதி, பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் கிருமித்தொற்று குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது,"
"இச்சமயத்தில் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தீவிரவாத தாக்குதல்கள், பொது
நிறுவனங்கள் மீதான நம்பிக்கை இழப்பு, நிலை
யற்ற பொருளாதாரம், அரசியல் பதற்றங்கள் போன்ற பல்வேறு மனித உரிமை சவால்களைத்
தற்போதைய நிச்சயமற்ற நிலை தூண்டக்கூடும் அல்லது அதிகரிக்கச் செய்யும்," என்று அவர்
எச்சரித்தார்.
"இந்த நிச்சயமற்ற சூழலில் மன்றத்தின் ஒற்றுமை மற்றும் உறுதி மிகவும் முக்கியம். தொற்றுநோய்க்கு எதிராக வெற்றிபெற, நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்," என்றார்.

