மோண்டிவிடியோ: ஆஸ்திரேலிய உல்லாசக் கப்பல் ஒன்றில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 60 விழுக்காட் டினர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அர்ஜண்டினா, சிலி போன்ற அருகிலுள்ள தென் அமெரிக்க நாடுகள் முடங்கியிருப்பதால் எல்லைகள் மூடப்பட்ட நிலையில், உல்லாசக் கப்பல் இரு வாரங்களாக எங்கும் போக முடியாமல் நடுக்கடலில் சிக்கியிருந்தது.
சென்ற மாதம் 27ஆம் தேதியிலிருந்து நகர முடியாமல் இருந்ததை அடுத்து 'கரெக் மொர்டிமெர்' கப்பல், உருகுவெயில் உள்ள மோண்டிவிடியோ துறைமுகத்தை நேற்று முன்தினம் அடைந்தது.
கொரோனா கிருமித்தொற்று இல்லாதோர், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் வழி நேற்று காலை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எஞ்சிய 128 பயணிகள் கிருமி பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்து உல்லாசக் கப்பலில் தனிமைப்படுத்தப் படுவர் என்று உருகுவெய் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
உருகுவெய் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கப்பலிலிருந்து வெளியேற்றப்படும் பயணிகள் சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்ட ஒரு பாதையில் கொண்டு செல்லப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பயணிகளில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்று கூறப்பட்டது.
உருகுவெயில் இதுவரை 494 கிருமித்தொற்று சம்பவங்களும் 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

