கோலாலம்பூர்: மலேசியாவில் இணையத்தில் முகக்கவசத்தை வாங்க முயன்ற இருவர் $13,750 (41,920 ரிங்கிட்) இழந்தனர்.
ஒரு மோசடி கும்பல் அந்த இருவரையும் ஏமாற்றிவிட்டதாக பினாங்கு மாநிலத்தின் செபராங் பிராய் உத்தரா மாவட்ட பொறுப்பு அதிகாரியான உதவி ஆணையர் முகம்மது நூர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து அந்த இருவரும் மோசடி பேர்வழிகளிடம் சிக்கிவிட்டார்கள்.
இதனிடையே, மலேசியாவில் நேற்றுவரை 4,683 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 76 பேர் பலியாகிவிட்டனர். 2,108 பேர் குணமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

