கொவிட்-19: சீனா, தாய்லாந்து, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா

கொவிட்-19: சீனா, தாய்லாந்து, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா

3 mins read
66467be9-7afd-4536-8c66-b1de1ece4007
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. கடை ஊழியர் ஒருவர், கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கிறார். படம்: ஏஎஃப்பி -

தாய்லாந்து: மேலும் மூவர் மரணம்

பேங்காக்: தாய்லாந்தில் நேற்று கொரோனா கிருமித் தொற்றுக்குப் புதிதாக மூன்று பேர் பலியாகிவிட்டனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 33 பேரைக் கிருமி தொற்றியது என்றும் மொத்தம் 2,551 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டதாகவும் அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டனர்.

கொரோனா கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்காக தாய்லாந்தில் இந்த மாதம் முடியும் வரை அவசரநிலை நடப்பில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான வர்கள் தலைநகர் பேங்காக்கில் உள்ளனர். ஆகையால் பேங்காக்கில் காலவரம்பற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் அதிகரிக்கிறது

பெய்ஜிங்: சீனப் பெருநிலத்தில் சனிக்கிழமை புதிதாக 99 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அளவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகம்.

இதனால் அவர்கள் நாட்டுக்கு வரும் பயணிகளை சோதிக்கும் நடைமுறைகளைத் தீவிரப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா கிருமித்தொற்று சூழலில் முகக்கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை சீனா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.

ஆனால் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் தரம் குறைந்தவை என்று ஐரோப்பாவில் புகார்கள் கிளப்பி உள்ளன. இந்த நிலையில், சீனா அவசியமான நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது. இதன் விளைவாக ஏற்றுமதிகள் தாமதமடையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவின் குவாங்சூ நகரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆப்பிரிக்கர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சீனா மீது அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

கலவரம், சதித்திட்டம்: இந்தோனீசியாவில் ஐவர் கைது

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. இதன் எதிரொலியாக மக்கள் அச்­சத்­தில் பல­வற்­றுக்­கும் போரா­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கிரு­மிப் பாதிப்பு அதி­கம் உள்ள ஜாவா தீவில் தீ மூட்டும் படி­யும் கொள்­ளை­ய­டிக்­கும்­படி­யும் மக்­க­ளைத் தூண்­டி­விட முயன்­ற­தா­கக் கூறப்­படுவதன் பேரில் போலி­சார் ஐவரைக் கைது செய்­த­னர். ஜாவா முழு­வ­தும் ஏப்­ரல் 8ஆம் தேதி கல­வ­ரத்தை, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த அனார்க்கோ சிண்­டி­கா­லிஸ் என்ற ஒரு கும்­பல் சதித்­திட்­டம் போட்­டது. "நெருக்­கடி வந்­து­விட்­டது. கொளுத்­து­வோம். பணக்­கா­ரர்­க­ளைக் கொல்­வோம். வாழ்­வோம் அல்­லது சாவோம்" என்று சுவர்­களி­லும் மின்கம்­பங்­க­ளி­லும் எழுதி­வைத்து அந்­தக் கும்­பல் நாச­ வே­லை­யில் ஈடு­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கொரோனா பாதிப்­புச் சூழ­லில் அர­சு அம­லாக்­கும் கொள்­கை­கள் அவர்­க­ளுக்­குப் பிடிக்கவில்லை. மக்­கள் பயந்­து­போய் இருக்­கி­றார்­கள். இந்­தச் சூழ்­நி­லை­யைத் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­படுத்­திக்கொள்ள அந்­தக் கும்­பல் முயல்­வதாக அதிகா­ரி­கள் கூறினர்.

ஆஸ்திரேலியாவில் எச்சரிக்கை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் நல்ல முறையில் பின்பற்றி வருகிறார்கள். ஒரு மீட்டர் விதியை மீறாமல் நடந்துகொண்டு வருகிறார்கள்.

இருந்தாலும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை இப்போதே அகற்றக்கூடாது என்று அந்த நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டான் முர்ஃபே தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 57 பேர் பலியாகி உள்ளனர். 6,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.