சீனாவில் மீண்டும் தலைதூக்கிய தொற்று

சீனாவில் மீண்டும் தலைதூக்கிய தொற்று

2 mins read
616d0102-cf11-44d4-bd12-a10ca4d51a39
வூஹானில் ஹனாகோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் முதல் ரயிலில் பயணம் செய்ய பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் அணிந்தபடி செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: சீனா­வில் ஆறு வாரங்­க­ளுக்­குப் பிறகு ஆக அதி­க­மாக நேற்று முன்­தி­னம் 108 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து, ரஷ்­யாவு­ட­னான எல்லைப் பகுதி தீவிர கண்­கா­ணிப்­பின்கீழ் கொண்டு வரப்­பட்­டு

உள்­ளது.

சீனா­வில் பெரும்­பா­லும் உள்­ளூர் கிரு­மிப் பர­வல் சம்­ப­வங்­கள் இல்­லாத நிலை­யில், அங்கு படிப்­ப­டி­யாக மக்­கள் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பி­னர். எனவே, அங்கு விரை­வில் பொரு­ளா­தா­ரம் பழைய நிலைக்­குத் திரும்­பும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால், வெளி­நாட்­டில் இருந்து வரு­ப­வர்­க­ளால், சீனாவில் கிருமித் தொற்­றின் 2வது அலை வீசக்­கூடும் என்ற அச்­சம் நில­வு­கிறது.

அந்த வகை­யில், ஞாயிற்­றுக்­கி­ழமை 108 கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி பதி­வான 143 சம்­ப­வங்­க­ளுக்­குப் பிறகு இது ஆக அதி­க­மான எண்­ணிக்­கை­யா­கும்.

108 பேரில் 98 பேர் வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­களில் பாதிப் பேர் ரஷ்­யா­வின் தூர கிழக்கு நக­ர­மான விளா­டி­வோஸ்­டாக்­வில் இருந்து சீனா­வின் ஹீலோங்­ஜி­யாங் மாகா­ணத்­திற்­குத் திரும்­பிய சீன நாட்­டி­னர் ஆவர்.

சீனா­விற்­கான அனைத்து விமா­னங்­க­ளை­யும் ரஷ்யா ரத்து செய்­து­விட்ட நிலை­யில், நிலம் வழி­யாகத் தாய­கத்­திற்­குத் திரும்புவதே ரஷ்­யா­வில் உள்ள சீனர்­க­ளுக்­கான ஒரே வழி­யாக உள்­ளது.

இதை­ய­டுத்து, கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் ஹீலோங்­ஜி­யாங் மாகா­ணத்­தின் எல்லை நக­ர­மான சூஃபென்­ஹே­வில், வூஹா­னில் மேற்­கொள்­ளப்­பட்­டது போன்ற கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும் சூஃபென்ஹே மற்­றும் ஹார்­பின் நக­ரங்­க­ளுக்கு வரும் அனைத்து வெளி­நாட்­டி­ன­ரும் 28 நாட்­க­ளுக்­குத் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யது கட்­டா­யமாக்கப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, மாஸ்­கோ­வில் இருந்து ஏப்­ரல் 10ஆம் தேதி எஸ்யூ208 விமா­னத்­தில் வந்த 60 பேருக்­குக் கிரு­மித்தொற்று உள்­ள­தாக ஷங்­காய் சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­தது.

கிரு­மித்தொற்­றுக்குப் பயந்து பலர் சூஃபென்ஹே நக­ரத்­தை­விட்டு வெளி­யே­று­வ­தா­க­வும் ஆனால் இன்­னும் பலர் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ள­தா­க­வும் அந்நகர மக்கள் கூறினார் கள்.