ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் கிருமிப் பரவலைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்போது, கரோக்கே கடையில் ஒன்று கூடியவர்களை மலேசிய போலிசார் கைது செய்தனர்.
பினாங்கின் ஜார்ஜ் டவுன் நகரில் உள்ள ஜாலான் பர்மாவில் உள்ள ஒரு கரோக்கே கடையில் மது விருந்தை நடத்தியதற்காக ஏழு மலேசிய ஆண்கள் மற்றும் இரண்டு இந்தோனீசிய பெண்கள் பிடிபட்டனர்.
கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியே செல்ல அனுமதியில்லை.
ரகசிய பிரிவு போலிசார் நடத்திய அதிரடி சோதனையில், அக்கடையின் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதாக ஜார்ஜ் டவுன் மாவட்ட போலிஸ் அதிகாரி சோபியன் சாண்டோங் கூறினார். ஆறு ஆடவர்கள் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்ததாகவும் அவர் சொன்னார்.

