எண்ணெய் விலை திடீர் உயர்வு

எண்ணெய் விலை திடீர் உயர்வு

2 mins read
a786bb55-193f-4f0a-be0e-3181a1f954a9
தேவைக்கு அதிகமாக உள்ள எண்ணெய் விநியோகத்தை சரி செய்யாவிட்டால் வரி அதிகரிப்பு அல்லது இதர நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக  ஓபெக்குக்கு தலைமை தாங்கும் சவூதி அரேபி யாவை டிரம்ப் எச்சரித்திருந்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்­கப்­பூர்: எண்­ணெய் வள­மிக்க நாடு­கள் நேற்று உற்­பத்­தியை குறைக்க முடிவு செய்­த­தால் கச்சா எண்­ணெய்யின் விலை திடீ­ரென அதி­க­ரித்­தது. இத­னால் படு­வீழ்ச்­சி­யில் உள்ள சந்­தை­கள் மீளும் என எதிர்­பார்க்­கப்­ப­ட்டது.

எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் அறிவிப்பு வெளி யானதும் மூன்று நாள் விடு­மு­றைக்­குப் பிறகு திறக்கப்பட்ட லண்டன் பங்­குச் சந்தையிலும் இது எதி ரொலித்தது.

பங்­கு­கள் எட்டு விழுக்­காடு ஏற்­றம் கண்­டன. ஆனால் அதே வேகத்­தில் பங்­கு­கள் வீழ்ச்­சி­ய­டைந்­தன. 'ஓபெக்' எனும் எண்ெணய் ஏற்­று­மதி செய்­யும் நாடு­களும் அதன் கூட்­டணி நாடு­களும் மே மாதத்­தி­ லி­ருந்து நாள் ஒன்­றுக்கு 9.7 மில்­லி­யன் பீப்­பாய் அள­வுக்கு எண்ெணய் உற்­பத்­தியைக் குறைக்க திட்டமிட்டுள்ளன.

கடந்த சில நாட்­க­ளாக நடந்த பேச்­சு­வார்த்­தைக்­குப் பிறகு நாடு ­க­ளுக்கு இடையே இந்த இணக்­கம் ஏற்­பட்­டது.

பிப்­ர­வரி மாதம் மத்­தி­யில் உல­கின் பெரிய பொரு­ளி­யல் நாடு­கள் கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் நாட்டை முடக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுத்­தன. இதை­ய­டுத்து கச்சா எண்­ணெய் விலை சரிவை நோக்­கிச் சென்­றது.

ஆனால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் முடிவு போது மான அளவு இல்லை என்று பல முன்னணி நிறுவனங்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

"எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் நாடு­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள இணக்­கம் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­போல இல்லை," என்று ஹுஸ்­ட­னில் உள்ள லிபோவ் எண்­ணெய் சங்­கத்­தின் தலை­வர் ஆன்டி லிபோவ் கூறி­னார்.

கோல்ட்­மேன் சேக், "இந்த இணக்­கம் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்­கது. ஆனால் போதாது," என்று கூறி­யது. மெக்சிகோ தனியாக 100,000 பீப்பாய் கச்சா எண்ெணய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து உள்ளது. முன்னதாக தேவைக்கு அதிகமாக உள்ள எண்ணெய் விநியோகத்தை சரி செய்யாவிட்டால் வரி அதிகரிப்பு அல்லது இதர நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ஓபெக்குக்கு தலைமை தாங்கும் சவூதி அரேபி யாவை டிரம்ப் எச்சரித்திருந்தார்.