பிரிட்டிஷ் பிரதமர்: எதுவும் நடந்திருக்கலாம்

பிரிட்டிஷ் பிரதமர்: எதுவும் நடந்திருக்கலாம்

1 mins read
75774c6f-e2da-4be4-a598-1f0225cc1c92
பிரதமர் ஜான்சன் சுயநினைவுடன் இருப்பதாகவும் ஒருவேளை அவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்பட்டால் அதை உடனே பெற ஏதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பி­யுள்ள பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன், தமக்கு என்ன வேண்­டு­மானா­லும் நடந்­தி­ருக்­க­லாம் என்று கூறி­யுள்­ளார்.

ஞாயிற்­றுக் கிழமை அவர் வீடு திரும்­பி­னார். கிரு­மித் தொற்று சந்­தே­கத்­தின் பேரில் 55 வயது போரிஸ் ஜான்­சன் தன்னை தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டார்.

ஆனால் ஏப்­ரல் 5ஆம் தேதி அவ­ரது உடல்­நிலை மேலும் பாதிக்­கப்­பட்­ட­தால் செயின்ட் தாமஸ் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். மறு­நாளே அவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டார்.

ஏப்­ரல் 9ஆம் தேதி வரை அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் கண் இமைக்­கா­மல் அவரை கவ­னித்­துக் கொண்­ட­னர்.

தேசிய சுகா­தார சேவை­யின் மருத்­து­வ­மனை தனது உயி­ரைக் காப்­பாற்­றி­யி­ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"ஒரு வாரத்­திற்­குப் பிறகு இன்று வீடு திரும்­பி­னேன்," என்று டுவிட்­ட­ரில் பதி­வேற்­றிய ஐந்து நிமிட காணொ­ளி­யில் பிரதமர் கூறினார்.

மருத்­து­வ­மனையின் மருத்­து­வர்­கள், ஊழி­யர்­கள் மற்றும் நியூ­சி­லாந்­தைச் சேர்ந்த ஜென்னி, போர்ச்­சு­கல்­லைச் சேர்ந்த லுயிஸ் ஆகிய இரு தாதி­யர்­களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இரு­ தாதியர்களும் தமது படுக்­கைக்கு அருகே நின்று 48 மணி நேரம் தம்மை கவனமாக கவனித்துக் கொண்டதாக திரு போரிஸ் ஜான்சன் கூறினார்.

பிரிட்­ட­னில் கொரோனா கிருமி அதி­வே­கத்­தில் பரவி வரு­கிறது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 980ஐ தாண்­டி­யது. சனிக்கிழமை வரை மொத்­தம் 10,612 பேர் மாண்டு­ விட்­ட­னர்.