கோலாலம்பூரிலுள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியா வட்டாரத்தில் நாற்பதுக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 கிருமிப்பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வட்டாரம் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள் ளது.
மலேசியாவின் மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்படி அந்த வட்டாரத்திற்குள் எவரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்துடன், அந்த வட்டாரத்தைச் சுற்றி முட்கம்பிகளைக் கொண்ட மதில்கள் பொருத்தப்பட்டுள்ள.
இந்த வட்டாரத்தில் 10,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

