தைப்பே: சீனாவின் வூஹான் நகரிலிருந்து கிருமி பரவத் தொடங்கியதுமே டிசம்பர் 31 முதல் நடவடிக்கையில் இறங்கி யது தைவான். முன்கூட்டியே நோய் தடுப்பு நடவடிக்கை களைத் தொடங்கியதன் பலனை அந்நாடு அனுபவித்து வரு கிறது. புதிய கிருமித்தொற்று சம்பவம் ஒன்றுகூட நேற்று அங்கு பதிவாகவில்லை. இதுவரை அங்கு 393 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதில் அறுவர் மாண்டனர்.
தைவானில் கிருமித்தொற்று அறவே இல்லை
1 mins read
கொவிட்-19 பரவலைத் தடுக்க தைவான் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் உணவகங்களில் பாதுகாப்பான இடைவெளியிலான இருக்கைகள். படம்: இபிஏ -

