சோல்: கொரோனா தொற்று சூழ்ந்து உள்ள உலகில் பொதுத்தேர்தலை நடத்தும் நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் கிருமித் தொற்றுக்கு இடையிலும் நேற்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடங்கியது.
நாடு முழுவதும் சுமார் 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் காலை 6 மணிக்கே வாக்கு அளிக்கத் தொடங்கினர்.
பிற்பகலுக்கு முன்பு 44 மில்லியன் பேரில் 27 விழுக்காட்டினர் அளித்துவிட்டனர்.
வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கை உறை அணிந்திருக்கவேண்டும். கை கழுவும் திரவத்தால் கையைச் சுத்தமாக கழுவி இருக்கவேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படுகிறது. உடல் அதிக வெப்பமாக இருந்தவர்கள் சிறப்பு சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தென்கொரியாவில் கிருமித் தொற்றுக்கு 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 225 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர்.

