தென்கொரிய பரிசோதனை கருவிகளுக்கு மலேசியா ஒப்புதல்

தென்கொரிய பரிசோதனை கருவிகளுக்கு மலேசியா ஒப்புதல்

1 mins read
bd554a4f-d56f-4200-bbcd-ef5e17f343fb
தென் கொரிய  சோத­னைக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்த மலே­சியா ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தை­ய­டுத்து, கொரோனா கிரு­மித் தொற்று பரி­சோ­தனை அங்கு முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. படம்: இபிஏ -

புத்­ரா­ஜெயா: தென் கொரிய சோத­னைக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்த மலே­சியா ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தை­ய­டுத்து, கொரோனா கிரு­மித் தொற்று பரி­சோ­தனை அங்கு முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சோத­னைக் கரு­வி­கள் கிரு­மித்­தொற்றை 84.4 விழுக்­காடு கண்­ட­றி­யக்­கூ­டும் என்று அறி­யப்­பட்ட பின்­னர், சுகா­தார அமைச்சு இவ்வாறு உத்­த­ர­வி­ட்டுள்ளது.

அடுத்த வாரத்­தில் தென் கொரி­யா­வி­லி­ருந்து முதற்கட்ட பரி

சோதனை கரு­வி­கள் வந்­த­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள பெரிய குழு­மங்­களில் இருப்­ப­வர்­க­ளை­யும் பாதிக்­கப்­ப­டக் கூடிய வாய்ப்பு அதி­கம் உள்­ள­வர்­க­ளை­யும் பரி­சோ­திக்க இது பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் நேற்று புதி­தாக 110 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அதே சம­யம் குண­ம­டைந்து வீடு திரும்­பி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 119 என நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.

இதை­ய­டுத்து 5,182 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், குண­ம­டைந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 2,766 ஆகும்.

நேற்று மேலும் ஒரு­வர் மர­ணம் அடைந்­த­தை­ய­டுத்து மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 84ஆக உயர்ந்­துள்­ளது.

கோலா­லம்­பூர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைப் பெற்று வந்த அந்த 66 வயது ஆட­வ­ருக்கு ஏற்­கெ­னவே இரு­தயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தப் பிரச்­சினை இருந்­தது.