வூஹான் கொரோனா மரண எண்ணிக்கையில் திருத்தம்

வூஹான் கொரோனா மரண எண்ணிக்கையில் திருத்தம்

2 mins read
9a271359-795a-47a4-91c5-da8f33926107
இவ்வாண்டு மார்ச் 23ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் வூஹானில் உள்ள டோங்ஃபெங் ஹோண்டா தொழிற்சாலையின் ஊழியர்கள் மதிய வேளை உணவு சாப்பிடுகின்றனர். கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற் காக ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அவர்கள் உட்கார்ந்துள்ளனர். இவ்வேளையில் சீனாவின் பொருளியல் பத்தாண்டுகளில் இல்லாத அளவு முதல் காலாண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: கொரோனா கிருமி தோன்­றிய வூஹான் நக­ரில் அந்த கிரு­மி­யால் அந்த நக­ரில் உயி­ரி­ழந்­ த­வர்­க­ளின் அதி­கா­ர­பூர்வ எண்­ணிக்­கை­யில் மாற்­றம் செய்­யப்­பட்டு­உள்­ளது.

கிருமியால் பாதிக்கப்பட்டவர் களில் 2,579 பேர் இறந்து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் ஆயி­ரம் பேர் அதி­க­மாக, அதா­வது மொத்­தம் 3,869 பேர் இறந்து விட்­ட­தாக தற்போது அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 325 கூடி 50,333ஆகி­யுள்­ளது.

இத­னால் சீனா முழு­வ­தும் கிரு­மிக்குப் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 4,600க்கு மேல் கூடி­யுள்­ளது.

நாடு முழு­வ­தும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­களும் 83,000ஐத் தாண்­டி­யுள்­ளது.

வூஹான் நக­ரில் கொரோனா கிருமி கட்­டுக்­குள் இருப்­ப­தாக ஹுபெய் மாநில அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கட்­டுப்­பா­டு­களும் அங்கு படிப்படி­யாக அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.

ஆரம்பத்தில் போதுமான படுக்கைகள், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகள் சிரமத்தில் இருந்ததால் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை தவ­றாக கணக்­கி­டப்­பட்­டது. மற்ற மருத்­துவ நிலை­யங்­களும் உட­ன­டி­யாக தக­வல்­களை தெரி­விக்­க­வில்லை.

சில நோயா­ளி­கள் மருத்­து­வ ­ம­னை­களில் சேர்க்­கா­மல் வீட்­டில் இறந்­து­விட்­ட­னர் என்று வூஹான் நகர நோய் தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தின் அறிக்கை தெரி­வித்­தது.

இந்த நிலை­யில் புதிய மரண எண்­ணிக்­கை­யால் வூஹான் நகர மரண விகி­த­மும் 7.7 விழுக்­காடு கூடி­யுள்­ளது.

கடந்த மாதம் எட்டு இறு­திச் சடங்கு நடை­பெற்ற இடங்­களில் அஸ்­தி­யைப் பெறு­வ­தற்­காக நீண்ட வரி­சை­யில் ஏரா­ள­மா­னோர் காத்­தி­ருந்­த­னர்.

இத­னால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் மரணமடைந்த வர்களின் எண்ணிக்கையை வூஹான் நகர அதிகாரிகள் திருத்தி யுள்ளனர்.

வரலாற்றுப் பிழையைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறினர்.