சென்னையில் சிக்கிக்கொண்ட மலேசியர்கள்

1 mins read
726feb72-ff02-4ef9-944f-15a70edb4bab
கொரோனா கிருமி பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக விமா­னப் பயணங்­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தால் இந்­தி­யா­ சென்ற மலே­சி­யர்­கள் பலர் சென்­னை­யில் சிக்­கிக்கொண்­ட­னர். படம்: என்எஸ்டி -

கோலா­லம்­பூர்: கொரோனா கிருமி பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக விமா­னப் பயணங்­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தால் இந்­தி­யா­ சென்ற மலே­சி­யர்­கள் பலர் சென்­னை­யில் சிக்­கிக்கொண்­ட­னர்.

செவ்­வாய்க்கிழமை காலை 11 மணி­ய­ள­வில் 79 மலே­சி­யர்­களும் 14 இந்­தி­யர்­களும் மலிண்டோ ஏர்­லைன்­சின் சிறப்பு விமா­னத்தின் மூலம் மலே­சி­யா­வுக்­குத் திரும்­ப­வி­ருந்­த­னர்.

ஆனால் இந்­திய அர­சாங்­கம் தரை­யி­றங்க அனு­மதி வழங்­கா­த­தால் அந்த விமா­ன சேவை ரத்து செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. சென்னை விமான நிலை­யத்­துக்கு வந்த பிறகே சில­ருக்கு விமா­ன சேவை ரத்து செய்­யப்­பட்­டது பற்றி ெதரிய வந்­தது.

அவர்­களில் சிலர் தங்­கும் விடு­தி­களை காலி செய்து 600 கிலோ மீட்­டர் தூரம் வரை பய­ணம் செய்து சென்னை விமான நிலை­யத்­துக்கு வந்திருந்தனர்.

மலே­சி­யர்களில் குழந்­தை­களும் முதி­யோரும் உள்­ள­னர். சிலருக்கு நீரி­ழிவு­ நோய் இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

விமா­ன சேவை திடீ­ரென ரத்து செய்­யப்­பட்­ட­தால் பய­ணி­கள் அனை­வ­ரும் சென்­னை­யி­லேயே தங்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது. தங்­களை மீட்க விைரவில் விமா­னம் வரும் என்­ற நம்­பிக்­கை­யோடு அவர்கள் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

முன்­ன­தாக பேசிய மலே­சி­யா­வின் துணை வெளி­யு­றவு அமைச்­சர் கமா­ரு­டீன் ஜஃபார், சென்­னை­யில் மலே­சிய விமா­னம் தரை­யி­றங்க இந்­திய அதி­கா­ரி­க­ளின் அனு­ம­திக்­கா­கக் காத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். இதற்­காக டெல்­லி­யில் உள்ள அதி­கா­ரி­க­ளு­டன் பேசி வரு­வதா க­வும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே சென்­னை­யில் உள்ள மலே­சியத் தூத­ர­கம், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஹோட்டல், உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசியமான உதவிகளை வருகிறது.