பாரிஸ்: பிரான்சில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டோர் எண்ணிக்கை சிங்கப்பூர் அளவில் நேற்றிரவு 7.30 மணி நிலவரப்படி 18,681ஆக பதிவானது.
இருப்பினும், கிருமிப் பரவல் மெதுவடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்தது.
பிரான்சில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை பலன் தரத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறைத் தலைவர் ஜெரோம் செலோமோன் கூறினார்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஒன்பதாவது நாளாக குறைந்திருப்பதாக திரு செலோமோன் தெரிவித்தார்.

