மிலான்: இத்தாலியின் மிலான் நகரில் கொரோனா கிருமித்தொற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளியலை வலுப்படுத்த வர்த்தகங்களைத் தொடங்கவும் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைத் திரும்ப வகை செய்யவும் இத்தாலியப் பிரதமர் கியூசிப்பி கோன்ட்டே கொண்டிருக்கும் திட்டத்துக்கு இது முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
இத்தாலியில் உள்ள பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிலானில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகம்.
கிருமித்தொற்று காரணமாக மிலானில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மிலானில் உயிரிழந்த பிற மாநிலத்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை நிறுத்தும் நிலை மிலானுக்கு இம்மாதம் ஏற்பட்டது.
பணக்கார நகரமான மிலானில் அண்மைய வாரங்களில் தாதிமை இல்லங்களில் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகள் மாண்டனர்.
அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து இத்தாலியை முழு முடக்கநிலையிலிருந்து பகுதி முடக்கநிலைக்கு மாற்ற பிரதமர் கோன்ட்டே திட்டம் கொண்டுள்ளார்.
ஆனால் வர்த்தகங்களை வழக்கநிலைக்கு மீண்டும் கொண்டு வர தொழிலதிபர்களும் பிற மாநில
அரசியல்வாதிகளும் அவருக்கு நெருக்குதல் தந்து வருகிறார்கள்.
இருப்பினும், மிலானில் கடுமையான பாதிப்பு நிலவி வருவதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதை வலியுறுத்து கின்றனர் மிலானைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.
இதற்கிடையே, இத்தாலியின் லொம்பார்டி வட்டாரத்தில் முன்கூட்டியே முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இத்தாலியைச் சேர்ந்த மூத்த மருத்துவ நிபுணர்கள் குறை கூறியுள்ளனர்.

