ஜகார்த்தா: சிங்கப்பூரர்கள் கனிவன்பு மிக்கவர்கள் என்பது கடல்தாண்டியும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்தோனீசியாவில் நேற்று வரை 6,575 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாண்டோர் எணிண்கை 582. கிருமிப் பரவலைத் தடுக்க அரசாங்கம் முயன்று வரும் வேளையில் தொண்டூழிய அமைப்புகளும் அதற்கு உறுதுணை புரிகின்றன.
அவ்வகையில் 'எஸ்ஜிபெடுலி' என்னும் தொண்டூழிய அமைப்பு ஜகார்த்தாவில் இயங்கி வருகிறது. இந்தோனீசியாவில் வாழும் சிங்கப்பூரர்களை உள்ளடக்கிய அந்த அமைப்பு கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சிகளுக்கு கைகொடுத்து வருகிறது. ஜகார்த்தாவில் உள்ள ஹரப்பான் கிட்டா தேசிய இதய நிலையத்துக்கு கடந்த வாரம் இந்த அமைப்பு மூன்று பெட்டிகளை அனுப்பி வைத்தது. அவற்றுள் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கான 70 கவச உடைகள் இருந்தன.
சிங்கப்பூர் தேசிய கொடி பொறிக்கப்பட்ட அப்பெட்டியில் 'கிருமிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

