கொவிட்-19: 20-04-2020 செய்திக்கொத்து

கொவிட்-19: 20-04-2020 செய்திக்கொத்து

2 mins read
3f1f3d8a-7f97-4468-8f69-3a24fb770b55
பிலிப்பீன்சின் காவிட் மாநிலத்தின் பக்கூர் என்னுமிடத்தில் உள்ள ஈரச்சந்தைக்குச் செல்வதற்காக இவர் பாதுகாப்பான இடைவெளியில் காத்திருக்கிறார். படம்: இபிஏ -

பிலிப்­பீன்­ஸில் 12 பேர் மர­ணம்

மணிலா: பிலிப்­பீன்­ஸில் நேற்று கொரோனா கிரு­மித் தொற்­றால் 12 பேர் உயி­ரி­ழந்­த­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து அங்கு மாண்­டோர் எண்­ணிக்கை 409 ஆனது. கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை நேற்று 172 ஆகப் பதி­வா­னது. அதைத் தொடர்ந்து இது­வரை பிலிப்­பீன்­ஸில் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை 6,259 ஆக உயர்ந்­தது. இது­வரை 572 பேர் கிரு­மிப் பாதிப்­பி­லி­ருந்து குண­ம­டைந்து வீடு திரும்பி விட்­ட­தா­க­வும் அந்­நாட்டு சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

செம்­பனை எண்­ணெய் ஆலையைச் சுற்­றி­லும் 11 பேருக்கு கொரோனா

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் ஆக அதி­க­மாக செம்­பனை எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் மாநி­ல­மான சாபா­வின் ஒரு பகு­தி­யில் செம்­பனை உற்­பத்­திப் பணி­கள் நிறுத்தி வைக்­கப் பட்டு உள்­ளன. அந்த வட்­டா­ரத்­தில் புதி­தாக 11 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து உல­கின் ஆகப் பெரிய செம்­பனை கச்சா எண்­ணெய் உற்­பத்தி நிறு­வ­ன­மான எஃப்ஜிபி ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் ஃபெல்டா சஹா­பாத்­தில் உள்ள செம்­ப­னைத் தொழிற்­கூடங்களிலும் ஆலை­க­ளி­லும் நடை­பெற்று வந்த பணி­கள் அத்­த­னை­யும் தற்­கா­லி­மாக நிறுத்­தப்­பட்டு உள்­ளன. மேலும் அந்­தப் பகு­தி­களில் ஆட்­கள் நட­மாட வேண்­டாம் என்­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ள­தாக மாவட்ட போலிஸ் தலைமை அதி­காரி நஸ்ரி மன்­சூர் தெரி­வித்­தார்.

சீனா­வில் 16 பேர் மட்­டும் பாதிப்பு

பெய்­ஜிங்: சனிக்­கி­ழமை 16 பேரி­டம் மட்­டுமே கிரு­மித் தொற்று காணப்­பட்­ட­தாக சீனா தெரி­வித்­தது. இது மார்ச் 17ஆம் தேதிக்­குப் பின்­னர் ஆகக்­கு­றை­வான எண்­ணிக்கை. அத்­து­டன் வெள்­ளிக்­கி­ழமை பதி­வான நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் 27 என குறைந்த அள­வில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. புதிய 16 நோயா­ளி­களில் 9 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்ற விவ­ரத்­தை­யும் சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யம் வெளி­யிட்­டது.

பாகிஸ்­தான் நெருக்­கடி தீர கைகொ­டுக்­கும் அமெ­ரிக்கா

இஸ்­லா­மா­பாத்: கொரோனா கிரு­மிப் பர­வலை எதிர்த்துப் போராட பாகிஸ்­தா­னுக்கு 8.4 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­கள் நிதி­யு­தவி அளிப்­ப­தாக அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது. பாகிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்க தூதர் பால் ஜோன்ஸ் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார். இது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட காணொளிப் பதி­வில், "8 மில்­லி­யன் டால­ருக்­கும் அதி­க­மான புதிய பங்­க­ளிப்­பு­க­ளு­டன் கொரோனா கிருமி பர­வு­வதை தடுக்­க­வும் பாதிக்­கப்­பட்ட மக்­களை கவ­னித்­துக்­கொள்­ள­வும் பாகிஸ்­தான் அர­சாங்­கத்­து­டன் அமெ­ரிக்கா ஒத்­து­ழைக்­கிறது. அதற்­காக 8 மில்­லி­யன் டால­ருக்­கும் அதி­க­மான புதிய பங்­க­ளிப்பை அந்­நாட்­டுக்கு அமெ­ரிக்கா அளிக்கிறது," என்று பால் ஜோன்ஸ் கூறியுள்ளார்.