கொரோனா: மத்திய கிழக்கில் ஈரானை விஞ்சியது துருக்கி

கொரோனா: மத்திய கிழக்கில் ஈரானை விஞ்சியது துருக்கி

1 mins read
f67328c9-755e-4022-b34c-502284a4131d
இஸ்தான்புல் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணிந்து பேருந்துக்காக காத்திக்கிறார் இந்தப் பெண்மணி. படம்: ஏஎப்பி -

இஸ்­தான்­புல்: துருக்­கி­யில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக 82,329 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக துருக்கி சுகா­தார அமைச்­சர் கோக்கா தெரி­வித்­தார். அந்த நாட்­டில் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி மொத்­தம் 1,890 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

சனிக்­கி­ழமை வரைப்­பட்ட 24 மணி நேரத்­தில் 121 பேர் பலி­யா­யி­னர். 3,783 பேரைக் கிருமி தொற்­றி­யது என்­றும் மத்­திய கிழக்­கில் துருக்கி, ஈரானை விஞ்சி படு­மோ­ச­மாக இருக்­கிறது என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கொரோனா கிருமி பாதிப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில், அந்­தக் கிருமி பிறந்த சீனா­வைத் துருக்கி ஏறக்­கு­றைய நெருங்­கி­விட்­டது என்­றும் அவர் கூறி­னார்.

நோயா­ளி­க­ளுக்குக் கூடு­மா­ன­வரை­யில் சிறந்த சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் இது­வ­ரை­யில் 10,453 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்­கி­றார்­கள் என்­றும் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 24 மணி நேரத்­தில் 40,520 பேருக்­குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அமைச்­சர் கோக்கா கூறி­னார்.

துருக்­கி­யில் 31 நகர்­க­ளுக்கு இடை­யில் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு உள்­ளன. அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு முதல் மேலும் 15 நாட்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­படும் என்று உள்­துறை அமைச்சு அறி­வித்­தது.