மலேசிய அமைச்சர்: நடமாட்ட கட்டுப்பாட்டு விதியை மீறவில்லை

மலேசிய அமைச்சர்: நடமாட்ட கட்டுப்பாட்டு விதியை மீறவில்லை

2 mins read
d0a61c00-2c4a-47a7-b85e-f7c1526272ba
மலேசியாவில் நடப்பில் உள்ள கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறைக்கான மூத்த துணை அமைச்சர் சப்ரி யாக்கோப் எச்சரித்துள்ளார். படம்: பிர்டாஸ் லத்தீப் -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கிரா­மிய வளர்ச்சி துணை அமைச்­சர் அப்­துல் ரஹ்­மான் முகம்­ம­தின் வீட்­டிற்­குச் சிலர் கேக்­கு­டன் வந்­த­னர். அந்த அமைச்­ச­ரின் பிறந்­த­நாள் கேக் வெட்டி கொண்­டா­டப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் புகைப்­ப­டங்­கள் ஃபேஸ்புக் பக்­கத்­தில் வெளி­யாகி இருந்­தன.

இது பற்றி கருத்து தெரி­வித்த அமைச்­சர் ரஹ்­மான், அந்­தச் சம்­ப­வம் யதார்த்­த­மாக நடந்­தது என்­றும் அதில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு விதியை மீறும் நோக்­கம் எது­வும் இல்லை என்­றும் விளக்­கம் அளித்­தார்.

தன் வீட்­டுக்கு கேக்­கு­டன் வந்­த­வர்­கள் தனது லிப்­பிஸ் தொகுதி மக்­க­ளுக்கு அத்­தி­யா­வி­யப் பொருட்­களை வழங்­கு­வ­தில் உதவி செய்­த­வர்­கள் என்­றார் அமைச்­சர்.

வீட்­டில் இருந்து புத்ரா ஜெயா­வுக்­குப் புறப்­பட்ட நேரத்­தில் இரவு சுமார் 9 மணிக்கு அவர்­கள் வந்த தாக­வும் புத்ரா ஜெயா­வுக்­குப் புறப்­பட்ட தன்னை வாழ்த்தி கேக்கை கொடுத்­தார்­கள் என்­றும் அந்த நாள் தற்­செ­ய­லாக தனது பிறந்­த­நா­ளா­க­வும் அமைந்­து­விட்­டது என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அந்த நிகழ்ச்­சி­யில் அப்­துல் ரஹ்­மான் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­க­வில்லை என்­ப­தும் அங்கு ஒரு மீட்­டர் இடை­வெளி நியதி கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தும் புகைப்­ப­டங்­கள் மூலம் தெரிய வந்தது.

இத­னி­டையே, லெங்­கோங்­கில் நிகழ்ச்சி ஒன்­றில் சுகா­தா­ரத் துணை அமைச்­சர் டாக்­டர் அஸ்மி கஸா­லி­யும் பேராக் மாநில நிர்­வா­கக் குழு உறுப்­பி­ன­ரான ரஹ்­மான் சக்­கா­ரி­யா­வும் கலந்­து­கொண்டு உணவு உண்­ட­தைக் காட்­டும் பதி­வு­கள் சனிக்­கி­ழமை சமூக ஊட­கத்­தில் இடம்­பெற்று இருந்­தன.

இத­னைப் பார்த்த பல­ரும் குறை­கூறி இருந்­த­னர்.

இதன் தொடர்­பில் கருத்து தெரி­வித்த திரு ரஹ்­மான் சக்­கா­ரியா, அந்த நிகழ்ச்சி தொடர்­பில் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டார்.