பெர்லின்: இயல்புநிலைக்குத் திரும்ப ஜெர்மனி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெர்மனியில் கொரோனா கிருமித்தொற்று கட்டுக்குள் வந்துவிட்டதாக அந்நாட்டு அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, கிருமித்தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைப் படிப்படியாக ஜெர்மனி தளர்த்தி வருகிறது. ஜெர்மனியில் உள்ள சில இடங்களில் சிறிய கடைகள் ஒரு மாதம் கழித்து மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தலைநகர் பெர்லினில் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மனி பொருளியலை மேம்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்தும் ஜெர்மனி
1 mins read
ஜெர்மனியின் பேரங்காடிகளில் வாடிக்கையாளர்களின் தேவையைக் கேட்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுக்க மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 'பெப்பர்' என்று பெயரிடப்பட்ட அந்த மனித இயந்திரம், பேரங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. படம்: இபிஏ -

