நோவா ஸ்கோட்டியா: கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாநிலத்தில் போலிஸ் அதிகாரியைப் போல வேடமிட்ட துப்பாக்கிக்காரன் 16 பேரைச் சுட்டுக்கொன்றான்.
12 மணி நேரம் நீடித்த இந்தப் பயங்கரச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
இதுவே கனடாவில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான ஒரே நேரத்தில் பலரைக் கொன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.
மாண்டவர்களில் 23 ஆண்டுகளாக கனடா போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய ஹைடி ஸ்டீவன்சனும் ஒருவர்.
அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
துப்பாக்கிக்காரனான 51 வயது கேப்ரியல் வோர்ட்மன் போலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வோர்ட்மன் தமது காரை போலிஸ் வாகனம் போல் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

