ஜகார்த்தா: இந்தோனீசியாவில் புதிதாக 283 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது. மொத்தம் 7,418 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் புதிதாக 19 பேர் மாண்டதாகவும் சுகாதார அதிகாரி டாக்டர் யுரியாந்தோ நேற்றுக் கூறினார்.
அங்கு மொத்தம் 635 பேர் பலியாகிவிட்டனர். 913 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, பிலிப்பீன்சில் புதிதாக ஒன்பது பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானதாகவும் புதிதாக 111 பேரை அந்தக் கிருமி தொற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

